Ads (728x90)

எட்டாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகப் பாராளுமன்றத்தால் தெரிவுசெய்யப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவை நாட்டின் ஜனாதிபதியாகத் தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென மக்கள் தன்னெழுச்சிப் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

ரணில் விக்ரமசிங்வைத் துரத்தும் வரை தொடர்ச்சியாகப் போராடப்போவதாகவும், அடக்குமுறைகளைமீறி அப்போராட்டம் தொடரும் எனவும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் விசேட செய்தியாளர் சந்திப்பில் நேற்று அறிவித்துள்ளனர்.

நேற்று 102 ஆவது நாளாகவும் காலிமுக்ததிடலில் மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் தொடர்ந்த நிலையில் பாராளுமன்றம் 8 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவைத் தெரிவுசெய்ததுடன் தன்னெழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்றுள்ள போராட்டக்காரர்கள் இணைந்து ஊடக சந்திப்பொன்றை நடாத்தியுள்ளனர்.



Post a Comment

Recent News

Recent Posts Widget