Ads (728x90)

இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இன்று 21 ஆம் திகதி எளிமையான முறையில் பாராளுமன்ற கட்டத்தொகுதியில் பிரதமர் நீதியரசர் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து கொண்டார்.

இலங்கை அரசியல் வரலாற்றில் பாராளுமன்றின் இரகசிய வாக்கெடுப்பின் ஊடாக தெரிவு செய்யபட்ட முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க காணப்படுகின்றார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் 134 வாக்குகளை பெற்று புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக 134 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்த நிலையில், மற்றைய வேட்பாளர்களான டலஸ் அழகப்பெரும 82 வாக்குகளையும், அனுர குமார திசாநாயக்க 03 வாக்குகளையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Recent News

Recent Posts Widget