Ads (728x90)

காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பலாத்காரத்தைப் பயன்படுத்தியமை குறித்து தான் மிகவும் கவலையடைவதாக இலங்கைக்கான ஐ.நா.வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்களுக்கு ஆர்ப்பாட்டங்களை கண்காணிக்க உரிமை உண்டு என்றும் அவர்களின் செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்றும் ருவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

எதிர்ப்புக்கள் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமையை நசுக்கும் நடவடிக்கைகள் இலங்கையில் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரமின்மையை மோசமாக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget