Ads (728x90)

சிறப்பாகச் செய்யக்கூடிய ஒருவரிடம் தனது அமைச்சினை ஒப்படைக்க தயாராக இருப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று தனது அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 

இலங்கை கடன் செலுத்தாத நாடாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் எரிபொருள் விநியோகம் மிகவும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

இலங்கையில் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்ய செல்லும் போது பல விநியோகத்தர்கள் வெளிநாட்டு வங்கியொன்றின் சான்றிதழ் கேட்பதாகவும், இலங்கைக்கான எரிபொருளை வழங்குவதற்கான ஒப்பந்தங்களுக்கு எந்தவொரு விநியோகஸ்தர்களும் முன்வராத நிலை காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget