Ads (728x90)

காலிமுகத்திடலில் கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ஈவிரக்கமற்ற தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். 

இந்த தேவையற்ற, ஈவிரக்கமற்ற பலப்பிரயோகம் இந்த நாட்டிற்கு எந்த வகையிலும் உதவியாக அமையாது. நாட்டின் கௌரவத்திற்கும் சர்வதேச அளவில் உதவியாக அமையாது எனவும் தெரிவித்துள்ளார்.

பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பலர் தாக்கப்பட்டுள்ளதாகவும் எனக்கு தகவல்கள் கிடைக்கின்றன. அதிகாரிகள், அனைவரினதும் பாதுகாப்பையும் உறுதி செய்யவேண்டும். அனைவரும் எங்குவைக்கப்பட்டுள்ளனர் என்பதை வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget