தற்போது ஆபிரிக்க தொடர்பு இல்லாமலே உலகின் பல பகுதிகளில் குரங்கு அம்மை பாதிப்புகள் கண்டறியப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில வாரங்களில் 75 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய குரங்கு அம்மை நோயால் 16,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குரங்கு அம்மை நோய் பரவல், சர்வதேச சுகாதார அவசர நிலை பிரகடனம் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அறிவித்துள்ளார்.
பல்வேறு நாடுகளில் தொற்று பரவி வருவதை அடுத்து சர்வதேச சுகாதார அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு அடுத்தபடியாக குரங்கு அம்மை நோயை சுகாதார நெருக்கடி நிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
Post a Comment