மாதாந்தம் எரிபொருளுக்கான செலவு சுமார் 550 மில்லியன் டொலர்களாகும். அவற்றில் வாகனங்களுக்கான எரிபொருள் கொள்வனவுக்கான செலவு 350 - 400 மில்லியன் டொலர்களாகும்.
இதற்கு தேவையான நிதியை இந்தியா அல்லது வேறு நாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டியேற்படுகிறது. எனினும் தற்போது அவ்வாறான நிதியை பெறுவது கடினமானது.
எவ்வாறாயினும் அடுத்த மாத நடுப்பகுதி வரை மட்டுமே மக்கள் குறையின்றி எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்தியா, சீனா அல்லது வேறு எந்த நாடும் சுமார் ஒரு பில்லியன் டொலர்களை வழங்கினால் குறைந்த பட்சம் மூன்று மாதங்களுக்கு எவ்வித சிக்கலுமின்றி எரிபொருளை வழங்க முடியும். இல்லையெனில் எரிபொருள் நெருக்கடி தொடரலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment