கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.
பல்கலைக்கழகங்கள் மீள திறக்குமாறும், மக்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறும், பொருட்களின் விலைகளைக் குறைக்குமாறும், அடக்குமுறை நிறுத்துமாறும் பொதுவான கோரிக்கைகளை முன்வைத்து ஜனநாயக ரீதியாக அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் தாக்குதல் மேற்கொண்டார்கள்.
காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களால், அதன் பின்னர் நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதனால் முன்னாள் ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. அதே நிலை மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளது.
சர்வதேச உதவி தேவைப்படும் நேரத்தில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்துவது நமது நாட்டிற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment