Ads (728x90)

சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்புடையதாகாத  பயங்கரவாதத் தடைச்சட்டங்களைப் பயன்படுத்துவது இலங்கையின் ஜனநாயகத்தை முற்றாக அழித்துவிடும் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான மக்களின் உரிமையை இலங்கை அரசாங்கம் உறுதி செய்யவேண்டும் என்று வலியுறுத்துகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே, கல்வௌ சிறிதம்ம தேரர் மற்றும் ஹஷாந்த ஜீவந்த குணதிலக ஆகிய மூவரையும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கான உத்தரவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று திங்கட்கிழமை கையெழுத்திட்டுள்ளார்.

அதனையடுத்து பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பிரயோகம் குறித்துத் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget