நாட்டின் முன்னேற்றத்திற்காக அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைப்பதே தமது நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற அநுராதபுரம் மாவட்ட அபிவிருத்தி சபைக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தாமதமின்றி அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கின்றேன். பழைய அரசியல் முறைமையை மக்கள் நிராகரித்துவிட்ட நிலையில் புதிய அரசியல் நிகழ்ச்சி நிரல் மற்றும் நேர்மையான அரசியல் பயணம் நாட்டிற்கு அவசியமாகிறது.
அடிமட்டத்தில் உள்ள அரச அதிகாரிகள் தமது கிராம சேவை அதிகாரி பிரிவில் அபிவிருத்தி மற்றும் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
எவருக்கும் வெறுமனே உணவு வழங்குவதற்கு அரசாங்கம் தயாரில்லை. வேலை செய்ய முடியாதவர்கள் வேலையை விட்டு நீங்கிக் கொள்ளலாம் எனவும் ஜனாதிபதி இதன் போது தெரிவித்துள்ளார்.
Post a Comment