Ads (728x90)

பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவதைத் நிறுத்துமாறும், தடுப்புக் கட்டளைகளை உடனடியாக இரத்துச் செய்யுமாறும் ஜனாதிபதி மற்றும் சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டுள்ள நபர்களை கைது செய்வதற்கும், தடுத்து வைப்பதற்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் விதிகளைப் பயன்படுத்துவதில் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டம் கருத்து சுதந்திரத்தை நசுக்குவதற்கும், அமைதியான பேச்சு உள்ளிட்ட ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்துபவர்களைக் குறிவைப்பதற்கும் அது முறைகேடு செய்யப்படும் அபாயம் உள்ளது எனவும இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

Post a Comment

Recent News

Recent Posts Widget