Ads (728x90)

பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படும் விதம் குறித்து தாம் கவலையடைவதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தமது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் பயன்பாட்டை நிறுத்துவது தொடர்பில்  அர்ப்பணிப்புகளுடன் இணங்கி செயற்படுமாறு பிரித்தானியா, இலங்கை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த சட்டத்தை பயன்படுத்தப்படுவதை நிறுத்துவதற்கான உறுதிமொழிகளில் அதிகாரிகள் நிற்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை சமூக செயற்பாட்டாளர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி கைது செய்யப்பட்டதாக வெளியான செய்தி குறித்து  ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை அலுவலகமும் கவலை வெளியிட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவதற்கான நடைமுறை தடை தொடர்பில் இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய உறுதிமொழிகளையும் தமது அலுவலகம் அவதானிப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. 




ட்விட்டர் பதிவின் ஊடாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.


பயங்கரவாத தடைச்சட்டத்தின் உபயோகம், மனித உரிமைகளுடன் பொருந்துவதில்லையெனவும் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.


எனவே, பயங்கரவாத தடைச்சட்டத்தின் உபபோயகத்தை நிறுத்துமாறு இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் வலியுறுத்தியுள்ளது. 


Post a Comment

Recent News

Recent Posts Widget