Ads (728x90)

அரச அலுவலகங்களை வெள்ளிக்கிழமைகளில் மூடுவது தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை இரத்து செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

அண்மைய நாட்களில் நிலவிய போக்குவரத்து நெருக்கடி காரணமாக வெள்ளிக்கிழமையை அரச அலுவலகங்களுக்கான விடுமுறை தினமாக அறிவித்து பொதுநிர்வாக அமைச்சினால் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

எனினும் தற்போது பொதுப்போக்குவரத்து படிப்படியாக வழமைக்கு திரும்பி வரும் நிலையில் இச்சுற்றறிக்கையை இரத்து செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் வாரம் முதல் வெள்ளிக்கிழமைகளில் அரச அலுவலகங்கள் வழமைபோல இயங்கும் என அமைச்சரவை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்


Post a Comment

Recent News

Recent Posts Widget