Ads (728x90)

இலங்கையில் அவசர உதவி தேவைப்படும் உணவுப் பாதுகாப்பற்ற 61,000  குடும்பங்களுக்கு ரூபா 10,000  பணப்பரிமாற்றங்களை வழங்க உலக உணவுத் திட்டம் முன்வந்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் தனது இடைக்கால வரவு செலவுத் திட்ட உரையில் நான்கு மாத காலத்திற்கு ஒரு குடும்பத்திற்கு 10,000 ரூபா வழங்குவதற்கான திட்டத்தை அறிவித்திருந்தார்.

இந்த ஆண்டு இறுதி வரை அவசர நிதி உதவி தேவைப்படும் அடையாளம் காணப்பட்ட உணவுப் பாதுகாப்பற்ற குடும்பங்களுக்கு உதவி வழங்க உலக உணவுத் திட்டம் முன் வந்துள்ளதாக  திறைசேரி அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயர் பணவீக்கம் மற்றும் வருமான இழப்புக்கு மத்தியில் இலங்கையர்கள் உணவுப் பாதுகாப்பின்மைக்கு ஆளாகியுள்ளனர்.

நாட்டின் மக்கள் தொகையில் 33 சதவீதம் அல்லது 7.15 மில்லியன் மக்கள் தற்போது தினசரி குறைந்தபட்ச ஊட்டச்சத்து தேவைக்கு குறைவான உணவை உட்கொள்வதாக உலக உணவுத் திட்டம் மதிப்பிடப்பட்டுள்ளது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget