புதிதாக முன்வைக்கப்படவுள்ள பிரேரணையின் வரைவு தற்போது மனித உரிமைகள் பேரவையில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஜெர்மனி, மசிடோனியா மற்றும் மலாவி ஆகிய நாடுகளின் இணை அனுசரணையில் இந்த பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளது.
இராணுவமயமாக்கல், நீதி மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக செயற்படுகின்ற அமைப்புகளின் சுயாதீனத்தன்மைக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றமை, மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகளில் முன்னேற்றம் காணப்படாமை, சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்கு செவிசாய்க்காமை, ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் காணாமலாக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்கள் அச்சுறுத்தப்படுகின்றமை, பின்தொடரப்படுகின்றமை, துன்புறுத்தப்படுகின்றமை மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகின்றமை தொடர்பிலான விடயங்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என இணை அனுசரணை நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட பிரேரணை மற்றும் அதன் வழிதோன்றும் எவ்வித பிரேரணைகளையும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment