Ads (728x90)

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக இலங்கை தமிழர்களுக்காக அனைத்து வசதிகளுடனும் கூடிய நிரந்தர வீடுகளைக் கொண்ட மறுவாழ்வு முகாம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த மறுவாழ்வு முகாமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி மூலம் திறந்து வைத்துள்ளார்.

இந்த நிரந்தர வீடுகள் திண்டுக்கல்லில் இலங்கை அகதிகள் குடியிருந்த தோட்டனூத்து, அடியனூத்து, கோபால்பட்டியில் உள்ள முகாம்களை ஒருங்கிணைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.

தமிழக முகாம்களில் வாழும் இலங்கையர்கள் நீண்ட நாட்களாக  நிரந்தர குடியிருப்புகளுக்கான கோரிக்கைகளை முன்வைத்து வந்த நிலையில் முதன் முறையாக நிரந்தர குடியிருப்பு வசதிகளை தமிழக அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

17.84 கோடி இந்திய ரூபா செலவில் தலா 300 சதுர அடியில் 321 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

Post a Comment

Recent News

Recent Posts Widget