தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 03 மில்லியன் ரூபாவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 04 மில்லியன் ரூபாவும் மற்றும் உயிரிழந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 03 மில்லியன் ரூபாவும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு செலுத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிலுவைத் தொகையினை பெற்றுக்கொள்வதற்காக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகள், பொது நிர்வாக அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த விடயம் தொடர்பில் சபாநாயகருடனும் நேரடியாக கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீர் கட்டணத்தினை செலுத்த தவறும் பட்சத்தில் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் எனவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அத்துடன் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலங்களில் வசிக்கும் அரச அதிகாரிகளிடமிருந்தும் செலுத்தப்படாத நிலுவை நீர்க்கட்டணங்களை அறவிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சபை மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment