சமாதானத்தைக் கட்டியெழுப்புபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தொடர்ந்தும் ஐக்கிய நாடுகள் சபை பணியாற்றுவதாக பிராண்ட்ஸ் கெஹ்ரிஸ் ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவையில் நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தபோது தெரிவித்துள்ளார்.
முக்கியமாக மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் உறுப்பினர்கள் பழிவாங்கல் மற்றும் அச்சுறுத்தல்களை சந்தித்தார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செயற்பாடுகள் காரணமாக குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளில் உள்ளவர்கள் ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைப்பதைத் தவிர்த்தனர் என்றும் இல்சே பிராண்ட்ஸ் கெஹ்ரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
பழிவாங்கலுக்கு எதிராக உறுப்பு நாடுகளின் உறுதிமொழிகள் வழங்கப்பட்டபோதும் பொதுமக்கள் தொடர்ந்தும் துன்புறுத்தப்படுகிறார்கள் என்றும் அவர் தெரிவத்துள்ளார்.
Post a Comment