Ads (728x90)

பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

உலக குழந்தைகள் மற்றும் முதியோர் தினம் தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

அரசால் ஆரம்ப கட்டமாக 1,080,000 பாடசாலை மாணவர்களுக்கு சமச்சீர் உணவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சுகாதார அமைச்சின் ஊட்டச்சத்து நிபுணர்களின் ஒப்புதலுடன் சமச்சீர் உணவை வழங்குவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

உணவுப் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மேலதிக மாதாந்த கொடுப்பனவை வழங்குவதற்கும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget