2020ஆம் ஆண்டு 485ஆகவும், 2021ஆம் ஆண்டு 1,105 ஆகவும், 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் 519 ஆகவும் இடைவிலகிய மாணவர்கள் எண்ணிக்கை உள்ளதாக வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்திடம் கோரிய நிலையில் இத்தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
2020ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்தில் ஆகக்கூடுதலாக மடுக்கல்வி வலயத்தில் 94பேர் பாடசாலையிலிருந்து இடைவிலகியுள்ளனர். மன்னார் கல்வி வலயத்தில் 72பேரும், கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தில் 52பேரும், கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்தில் 51 பேரும், முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 48 பேரும் இடைவிலகியுள்ளனர்.
அதிகளவில் ஆண்களே இடைவிலகியுள்ளதுடன் 10ஆம் மற்றும் 11ஆம் தரங்களைச் சேர்ந்தவர்களே இதில் அதிகமாகவும் உள்ளனர்.
2021ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்தில் ஆகக் கூடுதலாக கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தில் 181 பேர் பாடசாலையிலிருந்து இடைவிலகியுள்ளனர். வலிகாமம் கல்வி வலயத்திலிருந்து 148 பேரும், மன்னார் கல்வி வலயத்திலிருந்து 135 பேரும், கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்திலிருந்து 119பேரும் இடைவிலகியுள்ளனர்.
2022 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் வரையில் வடக்கு மாகாணத்தில் ஆகக் கூடுதலாக வலிகாமம் கல்வி வலயத்தில் 123 பேர் பாடசாலையிலிருந்து இடைவிலகியுள்ளனர். வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் 110பேரும், மன்னார் கல்வி வலயத்தில் 101பேரும் இடைவிலகியுள்ளனர்.
வறுமை இதற்குப் பிரதான காரணம். அதனை விட கொரோனா காலத்தில் பாடசாலைகள் நீண்ட காலம் மூடப்பட்டதமையால் மாணவர்கள் தொழில்களை நாடிச் சென்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சில பெற்றோர் தமது பெண் பிள்ளைகளுக்கு திருமணமும் செய்து வைத்துள்ளனர் என்று வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
Post a Comment