Ads (728x90)

காலிமுகத்திடலில் இன்று மாலை இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிப்பதற்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே அனுமதியளிக்க மறுத்துள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி சாலிய பீரிஸ் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது அடிப்படை உரிமை என மன்றில் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் பல தரப்பினர் காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

இவ்வாதங்களை செவிமடுத்த நீதவான் ஆர்ப்பாட்டங்களின் போது வன்முறைகள், சட்டவிரோத சம்பவங்கள் இடம்பெறலாம் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை எனவும், ஏனையவர்களின் உரிமைகளிற்கு தடைவிதிக்காத எந்த ஆர்ப்பாட்டத்திற்கும் தடையில்லை. வன்முறைகள் இடம்பெற்றால் அதனை தடுப்பதற்கான அதிகாரம் பொலிஸாருக்குள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

”மக்களின் சுதந்திர உரிமைகள் மீது கை வைக்காதே ” என்ற தொனிப் பொருளில் கொழும்பு காலிமுகத்திடலில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை சட்டத்தரணிகள் மற்றும் தொழில் வல்லுனர்கள் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.

கொழும்பு காலி முகத்திடலில் நேற்று இடம்பெற்ற அமைதி ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் மிகவும் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டதைக் கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Recent News

Recent Posts Widget