Ads (728x90)

பலாலிக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை மூன்று வருடங்களின் பின்னர் அடுத்த வாரம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

பலாலிக்கும் சென்னைக்கும் இடையிலான விமானக் கட்டணம் கொழும்பு மற்றும் சென்னைக்கு இடையிலான விமானக் கட்டணங்களை விட கணிசமாகக் குறைவாக இருக்கும் என விமான சேவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவ்விமான சேவைகளை மீள ஆரம்பிப்பதும் மற்றும் இதன் குறைவான விமானக் கட்டணங்களும் வடக்கு மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

இதேவேளை விமான சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தளபதி சந்தன விஜயசுந்தர தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget