இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற கையளிப்பு நிகழ்வில் குறித்த தீயணைப்பு வாகனத்தை எஸ்.பி. சாமி அவர்கள் யாழ். மாநகரசபை மேயரிடம் கையளித்தார்.
குறித்த நிகழ்வில் நொதேண் சென்றல் தனியார் வைத்தியசாலை நிர்வாகத்தினர், யாழ் மாநகர முதல்வர், யாழ் மாவட்ட செயலர், யாழ் மாநகர ஆணையாளர், யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் யாழ். வணிகர் கழக பிரதிநிதிகள், தீயணைப்பு படை பிரிவு உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு யாழ். மாநகரசபைக்கு சொந்தமான தீயணைப்பு வாகனம் விபத்தில் முற்றாக சேதமடைந்திருந்த நிலையில் யாழ். வணிகர் கழகத்தின் ஒருங்கிணைப்பில் நொதோர்ன் தனியார் வைத்தியசாலை ஸ்தாபகரால் குறித்த வாகனம் யாழ் மாநகர சபைக்கு கையளிக்கப்பட்டது.
Post a Comment