Ads (728x90)

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் இணைந்து மேற்கொண்ட ஆர்பாட்டப் பேரணி மீது காவல் துறையினர் கண்ணீர் புகைப்பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு – கண்டி பிரதான வீதியை மறித்து களனி பல்கலைக்கழகத்திற்கு முன்னதாக இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேவை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



Post a Comment

Recent News

Recent Posts Widget