இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கும், தனியார் தொழில்நுட்பக் குழுவிற்கும் இடையில் அண்மையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
கையடக்கத் தொலைபேசி செயலி மூலம் நடைமுறைப்படுத்தப்படும் இந்த பொதுப்போக்குவரத்து சேவை இந்த கலந்துரையாடலின் போது அறிமுகம் செய்யப்பட்டது.
கொழும்பு கோட்டை, கொம்பனித்தெரு, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, பொரளை, நகர மண்டபம் உட்பட கொழும்பு நகரின் பெரும்பாலான பிரதான நகரங்களை உள்ளடக்கியதாக இந்த போக்குவரத்து சேவை திட்டமிடப்பட்டுள்ளது.
இச்சேவையில் எவ்வளவு தூரம் பயணித்தாலும் 200 ரூபா மாத்திரமே நிர்ணயிக்கப்பட்ட கட்டணமாக அறவிடப்படவுள்ளது.
இதற்கான கட்டணம் கையடக்க தொலைபேசியில் உள்ள செயலி மூலம் செலுத்தப்படுவதால் இந்த பஸ்களுக்கு நடத்துனர் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment