அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 8 ஆவது ஐ.சி.சி. இருபதுக்கு - 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு அழைத்தது. இந்நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றது.
இதனையடுத்து 138 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்து 5 விக்கெட்டுகளால் 8 ஆவது ஐ.சி.சி. இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
Post a Comment