Ads (728x90)

அரசாங்கம் கலைக்கப்படமாட்டாது என்றும், கலைப்பதற்காக எவரும் முயற்சித்தால் அதற்கு இடமளிக்கப்படாது என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

இதேவேளை இலங்கையின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும் வரை நாடாளுமன்றத்தை கலைக்கப்போவதில்லை என்று ரணில் தெரிவித்தார்.

பொருளாதாரத்தை சீராக்கிய பின்னர் தேர்தலுக்கு செல்ல முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எவருக்கும் எதிர்ப்புக் கூட்டங்களை நடத்த முடியும். வீதியில் நெருக்கடியை ஏற்படுத்தாமல் ஆர்ப்பாட்டங்களை நடத்தலாம். ஆனால் அதற்காக காவல்துறையின் அனுமதி பெறப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அனுமதியற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு இராணுவம் அல்லது அவசரகாலசட்டம் நடைமுறைப்படுத்கப்படும். அதற்கு இடம் தரப்படமாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே ரணில் விக்கிரமசிங்க இந்த கருத்துக்களை வெளியிட்டார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget