கொழும்பு மத்திய பிரிவிற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரின் கையொப்பத்துடன் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறும்போது வீதிகளை மறிப்பதன் காரணமாக அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர், கடமைகளின் பின்னர் வீடு திரும்பும் மக்கள், கோட்டை மற்றும் புறக்கோட்டையில் மொத்த வியாபாரத்தில் ஈடுபடுவோருக்கு இடையூறுகள் ஏற்படலாம் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தின் போது வீதிகள் மறிக்கப்படுவதன் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வீதிகளை மறித்தால் மக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை தவிர்ப்பதற்கு பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் படியும் வேறு சட்டங்களின் படியும் நடவடிக்கை எடுக்கவேண்டி ஏற்படும் எனவும் பொலிஸாரின் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Post a Comment