Ads (728x90)

உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லைகளை நிர்ணயம் செய்வதற்கு பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பொறுப்பானஅமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் தேசியகுழு நியமிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சிமன்ற தேர்தல் கட்டளைச் சட்டத்தின் கீழ் இந்த தேசிய குழுவை நியமிப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.

நவம்பர் முதலாம் திகதியிலிருந்து அடுத்த ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி வரை இக்குழு செயற்படவுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் ஜயலத் ரவி திஸாநாயக்க, டபிள்யு.எம்.எம்.ஆர்.அதிகாரி, கே.தவலிங்கம் மற்றும் ஐ.ஏ.ஹமீட் ஆகியோர் இக்குழுவிற்கு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget