இலங்கையின் பொருளாதார நிலைவரம், நிதியொதுக்கீடு மற்றும் வழங்கப்பட்டுள்ள உதவிகள் என்பன பற்றிய உலக உணவுத்திட்டத்தின் செப்டெம்பர் மாத மதிப்பீட்டு அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரமடைந்ததன் பின்னர் இலங்கை மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், உணவு, எரிபொருள் ஆகியவற்றின் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாட்டின் விளைவாக மக்கள் தமது அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதில் கடும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.
மேலும் இத்தீவிர பொருளாதார நெருக்கடியானது உணவுப்பாதுகாப்பின்மீது தொடர்ச்சியான அச்சுறுத்தலை ஏற்படுத்தும். அதேவேளை இந்நெருக்கடி எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரையான காலப்பகுதியில் மேலும் மோசமடையக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.
இந்நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் மக்களுக்கு அவசியமான அவசர உதவிகளை வழங்கும் செயற்திட்டம் கடந்த ஓகஸ்ட் மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. அதிலிருந்து கடந்த செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் பொருளாதார நெருக்கடியினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட 209,344 பேருக்கு 4.2 மில்லியன் டொலர் பெறுமதியான காசோலைகள் மற்றும் நிதிசார் உதவிகள் வழங்கப்பட்டிருப்பதுடன் 101,064 பேருக்கு அவசியமான ஏனைய உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
அதேபோன்று 2022 ஒக்டோபர் - 2023 மார்ச் வரையான 6 மாதகாலப்பகுதியில் மக்களுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்குத் தேவையான நிதியினளவு 28.86 மில்லியன் டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஒரு மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கு 3 மாத காலத்திற்கு உரியவாறான போசனையுடன்கூடிய உணவை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டிருக்கும் நிலையில், அதற்கு அவசியமான 1,475 மெட்ரிக் தொன் அரிசி மற்றும் 775 மெட்ரிக் தொன் இரும்புச்சத்தூட்டப்பட்ட அரிசி என்பன விநியோகத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை இச்செயற்திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு அவசியமான பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் என்பன மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Post a Comment