Ads (728x90)

மாவட்ட அபிவிருத்தி சபைகளை மீண்டும் ஆரம்பிக்கத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சபையில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த நடவடிக்கைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பூரண ஆதரவளிக்கும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அத்துடன் மாவட்ட அபிவிருத்தி சபை முறைமையின் ஊடாகவே நாட்டிற்கு நன்மை கிடைக்குமெனவும், வீணாக செலவாகும் பாரியளவிலான நிதியை இதனூடாக பாதுகாக்க முடியுமெனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget