Ads (728x90)

ஒரு மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் தற்போது இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், 26 சதவீத பாடசாலை மாணவர்களுக்கு தற்போது காலை உணவு வழங்கப்பட்டுவருவதாகவும் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத்திட்டம் நன்கொடையாளர்களின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


 


Post a Comment

Recent News

Recent Posts Widget