Ads (728x90)


தற்போது அரச சேவையில் உள்ள பட்டதாரிகளுக்கு டிசம்பர் மாத நடுப்பகுதியில் போட்டிப் பரீட்சையொன்றை நடாத்தி, அவர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.

2018 முதல் 2021 ஆம் ஆண்டு வரை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக சேவையில் உள்வாங்கப்பட்ட நிலையில், பணிகளுக்கு அமர்த்தப்படாத மேலதிக ஊழியர்களை இவ்வாறு ஆசிரியர் சேவையில் இணைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

பொது அறிவு மற்றும் உளநல பரீட்சைப் புள்ளிகளின் அடிப்படையில் ஆசிரியர் குறைபாட்டை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget