அதற்கமைய வெளிநாட்டில் இருந்து இலங்கை வரும் பயணிகள் தமக்கு கொவிட் தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக கட்டாயமாக பிசிஆர் பரிசோதனை அறிக்கை சமர்பிக்க வேண்டிய சட்டம் இன்று முதல் நீக்கப்படுவதாக ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கொவிட்-19 தடுப்பூசியைப் பெற்றதற்கான சான்றிதழும் இன்று முதல் கட்டாயமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் வெளிநாட்டுப் பிரஜைகள் அல்லது சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்த பின்னர் அவர்களுக்கு கொவிட்-19 தொற்று அடையாளம் காணப்படுமாயின், அவர்கள் தனியார் மருத்துவமனை அல்லது ஹோட்டல் அல்லது தங்குமிடத்தில் 7 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் என்பதோடு, அவர்களுக்கான சிகிச்சை அல்லது தனிமைப்படுத்துதலுக்கான செலவை அவரே ஏற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment