2022 ஆம் ஆண்டிற்கான முதலாவது மற்றும் இரண்டாவது குறைநிரப்பு பட்டியலுக்கு அமைய வாக்காளர்களின் எண்ணிக்கை அறிவிக்கப்படவுள்ளது.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 98 ஆவது சரத்தின் 08 ஆவது உபசரத்திற்கு அமைய உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கையும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
இதற்கான வர்த்தமானியை வௌியிடவும் இன்று நடைபெற்ற கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment