ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக நாங்கள் அவரை அழைத்து வந்தோம். ‘அரகலய’ மக்கள் இயக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ரணிலை ஜனாதிபதியாக நியமித்தோம். நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது. ‘அரகலய’ மீது தாக்குதல் நடத்தவே அவர் நியமிக்கப்பட்டார்” என சனத் நிஷாந்த தெரிவித்தார். மேலும் அவர் ரணில் விக்ரமசிங்கவை தற்காப்புக்காக வைத்திருந்த ஆயுதத்துடன் ஒப்பிட்டார்.
காலி முகத்திடலில் உள்ள ‘கோட்டா கோ ஹோம்’ தளத்தில் நிராயுதபாணியான ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கிய கும்பலை வழிநடத்தியதற்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிஷாந்த இந்த நேர்காணலின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்
Post a Comment