Ads (728x90)

புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் மற்றும் பல விடயங்கள் தொடர்பாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் திங்கட்கிழமை முதல் “கறுப்பு எதிர்ப்பு வாரத்தை” அறிவித்துள்ளது.

புதிய வரி திருத்தம் தொடர்பாக ”கறுப்பு எதிர்ப்பு வாரத்தை” நடத்துவதற்கு மத்திய குழு ஏகமனதாக தீர்மானித்ததாக சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

அநியாயமான வரி அதிகரிப்புக்கு எதிராக இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தமது கோரிக்கைகளுக்கு சாதகமான தீர்வு கிடைக்காவிடின் தொழிற்சங்கப் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget