இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தாக்கல் செய்த முறைப்பாட்டில் உயர்தரப் பரீட்சை காலப்பகுதியில் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த தவறியதன் மூலம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரம் அவமதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனவரி 23ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி 17ஆம் திகதி வரையான உயர்தர பரீட்சை காலப்பகுதியில் தடையின்றி தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவது தொடர்பில் கடந்த 25ஆம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அழைப்பு விடுக்கப்பட்ட கலந்துரையாடலில் இலங்கை மின்வலு எரிசக்தி அமைச்சின் செயலாளர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஆகியன தமது ஆணைக்குழுவில் சமரசம் செய்துகொண்டதாக நீதிமன்றில் தெரிவித்தது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உத்தரவை நடைமுறைப்படுத்த தவறியதன் மூலம், ஆணைக்குழுவின் அதிகாரத்திற்கு அவமதிப்பு செய்த குற்றத்திற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.
Post a Comment