முதலில் கற்றாழையில் இருக்கும் ஜெல்லை தனியாக எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் வெள்ளை சர்க்கரையை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின் அதை முகத்தில் தடவி கொள்ள வேண்டும். பிறகு 10 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதுபோல செய்து வருவதால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கி முகம் பொலிவு பெறும்.
அதுபோல கற்றாழையின் உள்ளே இருக்கும் அந்த ஜெல்லை எடுத்து கொள்ள வேண்டும். பின் அதனுடன் அரிசிமாவை சேர்த்து கொள்ள வேண்டும். பின் அதை ஒரு மிக்சி ஜாரில் போட்டு மைபோல அரைத்து கொள்ள வேண்டும். பின் இதை நீங்கள் உங்கள் முகத்திற்கு பேஸ் பேக் போல தடவி கொள்ளலாம். பின் 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.
இதுபோல வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்து வருவதால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறையும். அதுபோல முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் நீங்கும். முகம் பொலிவுடன் இருக்கும்.
ஒரு கிண்ணத்தில் கற்றாழை ஜெல்லை எடுத்து கொள்ள வேண்டும். பின் அதனுடன் சர்க்கரை மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மூன்றையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.
இப்படி செய்து வருவதால் உங்கள் முகத்தில் இருக்கும் கருமை, கரும்புள்ளிகள், தழும்புகள் மற்றும் கருவளையம் போன்றவை நீங்கி விடும். அதுபோல முகத்தில் வறட்சி நீங்கி பருக்கள் வராமல் தடுக்கிறது.
Post a Comment