Ads (728x90)

நாடளாவியரீதியில் சகல பாடசாலைகளின் 2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்காக ஜனவரி 20 ஆம் திகதி முதல் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. ஜனவரி 17 ஆம் திகதி பரீட்சை  நிறைவடைந்த நிலையில் திங்கள் முதல் மூன்றாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகி மார்ச் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளன.

இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் கடந்த 15 ஆம் திகதியுடன் நிறைவடைந்தன. கடந்த 16ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இப்பாடசாலைகளில் மூன்றாம் தவணைக்கான மூன்றாம் கட்ட நடவடிக்கைகள் மார்ச் முதலாம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget