2019, 2020, 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் தரம் 12 இல் கல்வி கற்ற மாணவர்களுக்காக இந்த பரீட்சை நடாத்தப்படவுள்ளது.
நாடளாவிய ரீதியில் 3, 269 பரீட்சை மத்திய நிலையங்களில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 12.10 வரை பொதுத்தகவல் தொழில்நுட்பப் பரீட்சை நடைபெறவுள்ளது.
இப்பரீட்சைக்கு விண்ணப்பிக்க தவறிய பாடசாலை பரீட்சார்த்திகள் 2023 ஆம் ஆண்டில் தரம் 12 இல் கல்வி கற்கும் மாணவர்களுக்காக நடாத்தப்படும் பொதுத்தகவல் தொழில்நுட்பப் பரீட்சையின் போது தமது பாடசாலைகளின் ஊடாக மீள விண்ணப்பிக்க முடியும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
Post a Comment