Ads (728x90)

தொழில்சார் சட்டத்துறையில் 50 வருடங்கள் சட்டப் பணியாற்றிய இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களைப் பாராட்டும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட அபிநந்தன விருது விழா நேற்று கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்றது.

இவ்விழாவில் 50 வருட தொழில்சார் சட்டப் பணியை நிறைவு செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய அவர்களால்  ‘அபிநந்தன விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

மேலும் ஜூலியானா மார்கரெட் கொஸ்வத்த, வோல்டர் லெஸ்லி டி சில்வா, இரத்னசபாபதி ஆறுமுகம் ஜெகதீசன், ஜனாதிபதி சட்டத்தரணி உபாலி ஏ. குணரத்ன. கனகரத்னம் கணேசயோகன், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர், நீதியரசர் அசோக நிஹால் டி சில்வா, நீதியரசர் டி.ஜே.த.எஸ். பாலபடபெந்தி, டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன உட்பட 26 சட்டத்தரணிகளுக்கும் விருதுகள் வழங்கி கெரவிக்கப்பட்டனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget