Ads (728x90)

இலங்கையில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக எடுக்கப்படும் கடுமையான பதில் நடவடிக்கைகள் குறித்து இணை அனுசரணை நாடுகள் கடும் கரிசனை வெளியிட்டுள்ளன. 

அமைதியான ஆர்ப்பாட்டங்கள், அமைதியான விதத்தில் கருத்து வெளியிடுவதற்கான உரிமைகளை இலங்கை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளன.

ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான எந்த வன்முறை குறித்தும் பொறுப்புக்கூறல் அவசியம் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம் என தெரிவித்துள்ள இணை அனுசரணை நாடுகள், மனித உரிமைகளை பாதுகாப்பதில் சிவில் சமூகம் முக்கிய பங்களிப்பை வழங்கவேண்டியுள்ளது எனவும் தெரிவித்துள்ளன.

எதிர்காலத்தில் சமர்ப்பிக்கப்டக்கூடிய எந்த சட்டமூலம் மூலமாகவும் சிவில் சமூகத்தின் செயற்பாட்டிற்கான தளத்தை பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை நாங்கள் வலியுத்துகின்றோம் எனவும் இணை அனுசரணை நாடுகள் தெரிவித்துள்ளன.


Post a Comment

Recent News

Recent Posts Widget