இதன் பொழுது அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் பயங்கரவாத தடைச்சட்டத்தினை முன்னிலைபடுத்திய போராட்டம் மற்றும் எதிர்காலத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடன் இணைந்து செயற்படவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இச்சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வசந்த முதலிகே பயங்கரவாத தடைச் சட்டம் இந்த நாட்டிலிருந்து முற்றாக நீக்கப்பட வேண்டும். அதனை நீக்குவதற்கு பல்கலைக்கழகங்கள் மாணவர்கள் ஒன்றாக இணைந்து தொடர் போராட்டம் ஒன்றை நடத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
வடக்கு மக்களுடைய பிரச்சினைகளை நன்கு அறிவதாகவும், அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கு தாங்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதன்போது கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர் 30 வருடங்களுக்கு மேலாக பயங்கரவாத தடைச் சட்டம் மூலம் தமிழ் மக்கள் நசுக்கப்பட்டு வருகிறார்கள். அப்போது குரல் கொடுக்காத நீங்கள் ஏன் தற்போது பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என நினைக்கிறீர்கள். அது மட்டும் அல்ல உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவதின் பின் பல முஸ்லிம்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டபோது அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏன குரல் கொடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.
இதன்போது வசந்த முதலிகே தமிழ் - முஸ்லிம் மக்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டமை தொடர்பில் எந்த பதிலும் வழங்கவில்லை மாறாக அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் மற்றும் 13வது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்க வேண்டுமென கூறியதுடன் வடக்கு பல்கலைக்கழகம் மாணவர்கள் தம்முடன் இணைந்து குரல் கொடுக்க முன்வருமாறு அழைப்பு விடுத்தார்.

Post a Comment