சீனா, இந்தியா உள்ளிட்ட அனைத்து முக்கிய கடன் வழங்குநர்கள் மற்றும் பாரிஸ் கிளப்பிடம் இருந்து தீர்மானம்மிக்க கொள்கை செயற்பாடுகளையும், நிதி உறுதிப்பாடுகளையும் பெற்றுக்கொள்வதில் இலங்கை அதிகாரிகள் அடைந்துள்ள முன்னேற்றத்தை தான் பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தினால் கடன் வழங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்ட பின்னர் ஏனைய தரப்பினரும் இலங்கைக்கு கடன் வழங்குவதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
நிறைவேற்றுக்குழுவின் அனுமதியானது உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட ஏனைய கடன் வழங்குநர்களிடமிருந்து நிதியுதவியை ஊக்குவிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment