Ads (728x90)

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று 7 ஆம் திகதி 12.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று மாலை சாந்தி கிரியைகள் நடைபெற்றது. இன்று அதிகாலை பூஜை வழிபாடுகளை தொடர்ந்து மத்தியானம் கொடியேற்றம் நடைபெற்றது.

தொடர்ந்து 15 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் 20ஆம் திகதி வியாழக்கிழமை காலை தேர் திருவிழாவும், மறுநாள் வெள்ளிக்கிழமை தீர்த்த திருவிழா இடம்பெற்று மாலை ,கொடியிறக்கத்துடன் மகோற்சவ திருவிழாக்கள் நிறைவு பெறும்.


Post a Comment

Recent News

Recent Posts Widget