Ads (728x90)

ரி20 உலகக் கிண்ணத் தொடரில் இன்று இடம்பெற்ற கடைசி லீக்கில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் நாணயசுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

பங்களாதேஷ் அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்றால் 12.4 ஓவரில் இலக்கை அடைய வேண்டும். அப்படி இல்லையென்றால் வெற்றி பெற்றால் கூட அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாது.

இந்த நிலையில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி தொடக்க முதலே விக்கெட்டுகளை இழந்தனர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததால் அந்த அணியால் 12 ஓவரில் இலக்கை அடைய முடியவில்லை. 

பங்களாதேஷ் அணி 17.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றதோடு அரையிறுதிக்கு முன்னேறியது. இதன் மூலம் அவுஸ்திரேலிய அணியின் அரையிறுதி கனவு கலைந்தது.


Post a Comment

Recent News

Recent Posts Widget