Ads (728x90)

உறுதிப் பத்திரங்கள் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு அடுத்த மாதம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள 8,000 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அறுதி உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். 

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான 1,070 உறுதிப் பத்திரங்களை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை முதலில் வழங்கவுள்ளது.

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் 50,000 கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு வீட்டு உரிமைப் பத்திரங்கள் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். அதன்படி இந்த உரிமைப் பத்திரங்கள் வழங்கப்படுகின்றன. 

முதற்கட்டமாக மிஹிந்து சென்புர, சிறிசர உயன, மெத்சர உயன, லக்முத்து செவன, சிறிமுத்து உயன ஆகிய திட்டங்களை மையப்படுத்தி உரிமைப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளது. 

 

Post a Comment

Recent News

Recent Posts Widget