Ads (728x90)

வட மாகாணத்தில் இருந்தே அதிகளவு மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதி பெற்றுள்ளனர் என்று பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கடந்த முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 64.3 வீதமான மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்று முன்தினம் வெளியாகின. கடந்த ஜனவரியில் நடந்த க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு 269,613 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். இவர்களில் 173,444 பேர் பல்கலைகழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget