Ads (728x90)

பொதுப்போக்குவரத்து சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டது.

1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச்சேவைச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி செயலாளரினால் இந்த வர்த்தமானிஅறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி பயணிகளுக்கும், பொருட்களுக்குமான பொதுப் போக்குவரத்துச் சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget